தமிழ்ப் பாராயணத்திரட்டு

 

சனிக்கிழமை

ஸ்ரீ ரமண ஸ்துதிபஞ்சகம்

இப்பாடலாசிரியர் சத்தியமங்கலம் வேங்கடரமண ஐயர், ஸ்ரீ பகவான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்தில் வந்தவர். முதல் நான்கு பாடல்களையும் தான் தங்கியிருந்த நாட்களில் நாளுக்கு ஒன்று வீதம் இயற்றி, ஐந்தாவதான ஸ்ரீ ரமண ஸத்குரு பாடலை ஊருக்குத் திரும்பிச் சென்றபின் இயற்றிப் பகவானுக்கு அனுப்பினார். ஸ்ரீ பகவானைப் போற்றும் துதிகளில், காலத்தால் மூத்த இவை (1910-1911) உயரிய வேதாந்த உண்மைகள் பலவற்றை உள்ளடக்கிய அரியதோர் பொக்கிஷமாக இலங்குகின்றன.

பிரம்மஞானியாகிய குருவின் சந்நிதி மாத்திரத்தில் முதன்முறையாக மலர்ந்து இதயத்தினின்றும் பெருக்கெடுத்த ஊற்றாகிய இப்பாடல்கள் ஒப்பற்ற எளிமையுடன் இருப்பினும் அதிசயிக்கத்தக்க நிரந்தரமான புதுப்பொலிவைக் கொண்டுள்ளது வியப்பே. ஒருவார காலம் மட்டுமே சிவனைப் பூஜித்த கண்ணப்ப நாயனார் சிவன் அருள் பெற்றார்போல், வேங்கடரமண ஐயரும் பகவானருகில் ஒருவாரம் மட்டுமே இருந்தார். ஆனால் அந்த ஒருவார காலம் ஆழ்ந்த பக்தியும் உயரிய அருளும் பெருகிப் பரவிய நாட்களாகும். ஸ்ரீபகவான் அவற்றை நினைவு கூறுங்கால், அவர் கும்மிப்பாட்டு இயற்றின அன்று மணவாசி ராமசாமி ஐயர், ராமநாத தீட்சிதர் மற்றவர்களும் சேர்ந்து அன்று இரவு இந்தப் பாடலைப் பாடிக் கும்மியடித்தனர் என்று கூறினார்.

Back